விஜய்சேதுபதிக்கு சிம்பு ரசிகர்கள் பகிரங்க மிரட்டல்!

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின், இறுதிக் காட்சியில், நடிகர் சிம்புவை விஜய்சேதுபதி சுட்டுக் கொல்வார். இந்த ரகசியத்தை ஊடகங்களும், விமர்சகர்களும் இதுவரை போட்டு உடைக்காமல் காப்பாற்றி வந்தனர்.

இந்நிலையில், சிம்புவின் வெறித்தனமான ரசிகர்கள் சிலர், விஜய்சேதுபதியை மிரட்டி பேனர் வைத்துள்ளனர். அதில், சிம்புவை கொன்ற விஜய்சேதுபதியை கண்டித்துள்ளனர். ரகசியம் லீக்கானதால், படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த்சாமி, அருண்விஜய், சிம்பு, விஜய்சேதுபதி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா என நடிகர்கள் பட்டாளமே ஒன்று கூடி நடித்த செக்கச்சிவந்த வானம் படம், கடந்த வாரம் வெளியாகி உலக அளவில் வெற்றி நடை போட்டு வருகிறது.

நாயகன், தளபதி படங்களுக்குப் பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பின், மணிரத்னம் வெற்றிப் பெற்றே ஆகவேண்டும் என கொரிய திரைப்படமான நியூ வோர்ல்ட் படத்தை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் எடுத்துள்ளார்.

படத்தில், ரசூலாக வரும் விஜய்சேதுபதி, இறுதிக் காட்சியில், எத்தி எனும் எத்திராஜாக வரும் சிம்புவை சுடுவது போன்ற காட்சி உள்ளது.

இதற்கு, தற்போது, சிம்பு வெறியர்கள் சிலர், ”எனக்கு ஒன்னுனா விட்ருவேன் எஸ்டிஆருக்கு ஒன்னுனா வேற மாதிரி ஆயிரும்..” என்றும், விஜய்சேதுபதி ரசிகர் மன்றங்களை கண்டிக்கிறோம் என்றும் பேனர்களை அடித்து, அதனை சமூக வலை தளங்களில் பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர். சிம்பு ரசிகர்களுக்கு விஜய்சேதுபதி ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த முட்டாள் தனமான ரசிகர்கள் போட்டியால்தான், தமிழில் பெரிய நடிகர்கள் ஒன்றாக இணைந்து நடிக்க முடியாத நிலை காலம் காலமாக தொடர்வது குறிப்பிடத்தக்கது.

More News >>