சிவகார்த்திகேயனின் ஏலியன் பட ஷூட்டிங் ஸ்டார்ட்!

இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ள புதிய படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ளது.

சீமராஜா படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜேஷ் படத்தில் நடித்து வந்தார். ஓகே ஓகே, பாஸ் என்கிற பாஸ்கரன், போன்ற காமெடி படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்தில், ஒரு ஃபன் ரைடர் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ராதிகா சரத்குமாரும் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்த நிலையில், மூவரும் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இன்று நேற்று நாளை எனும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமாருடன் மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் ஏலியன் ஜானர் கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், பூமியை தாக்க வரும் ஏலியன்களை, எதிர்த்து போராடும் வீரனாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கதையின் கரு கசிந்துள்ளது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் தனது படம் உருவாக வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கனவும் இப்படத்தின் மூலம் நிறைவேற உள்ளது.

More News >>