விதிமீறி கட்டப்பட்ட காட்டேஜ்களுக்கு சீல்: ஊட்டியில் அதிரடி நடவடிக்கை

ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்ட மூன்று காட்டேஜ்களுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஊட்டி மற்றும் புறநகர பகுதுகளில் விதிமீறி கட்டப்பட்ட வணிக கட்டிடங்கள், காட்டேஜ்கள் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, ஊட்டியில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை கண்டிறிந்து அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் கோடப்பமந்து பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்த மூன்று காட்டேஜ்களுக்கு நேற்று நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இதேபோல், ஊட்டி நகரில் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவுமு, விதிமுறைகளை மீறி யாரேனும் கட்டிடங்கள் கட்டியிருந்தால், அவை மூடி சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கையுடன் தெரிவித்தனர்.

More News >>