அன்பே சிவம் படத்துக்கு பிறகு 2 வருடம் கஷ்டப்பட்ட சுந்தர்.சி. நடிகை குஷ்பு தகவல்...

கமல்ஹாசன், மாதவன், கிரண் நடிக்கச் சுந்தர்.சி இயக்கிய படம் அன்பே சிவம். இப்படம் தற்போது பரவலாக பாராட்டப்படுகிறது. அன்றைக்கு விமர்சனங்களும் நன்றாகவே வந்தன. ஆனால் கமர்ஷியல் ரீதியாகப் படம் வெற்றி பெறவில்லை. சமீபத்தில் இப்படம் சிறந்த கிளாஸிக் படம் என்று பாராட்டு பெற்றுள்ளது.


இதுகுறித்து தகவல் அறிந்த குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறும்போது, இப்படம் கமர்ஷியலாக வெற்றி அடைந்திருக்கலாம். இப்படத்துக்குப் பிறகு என் கணவரால் (சுந்தர்,சி) வீட்டில் அமர முடியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்றொரு டிவிட்டர் மெசேஜில்,லாக் டவுனில் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் விமர்சகர்களாகி விடுகிறார்கள்.வேலையில்லாமல் இருக்கும் இந்த நாட்கள் ஒவ்வொரு டாம் டிக் அண்ட் ஹாரி எல்லோரும் விமர்சகர்கள் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தெரிந்து விஷயம் ஏதாவது செய்தால் நன்றாக இருக்கும். அல்லது பயனுள்ளதாக ஏதாவது செய்யட்டும். வெறும் கையை முழம் போடுவதை நிறுத்துங்கள் அதற்கு முயற்சி செய்யுங்கள் அது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இவ்வாறு கூறி உள்ளார் குஷ்பு.