பா.ஜ.வுக்கு நோட்டாவை விட கம்மியாதான் ஓட்டு கிடைக்கும்- குஷ்பு

the bjp will get less votes than notta-khushboo

by Subramanian, Apr 11, 2019, 00:00 AM IST

தமிழகத்தில் பா.ஜ. போட்டியிடும் 5 தொகுதியிலும் அந்த கட்சிக்கு நோட்டாவை விட குறைவாகவே வாக்குகள் கிடைக்கும் என நடிகை குஷ்பு உறுதியாக கூறினார்.


நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு தனது மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக் கூடியவர். அதனால் வரும் எதிர்ப்புகளையும் கண்டு கொஞ்சம் கூட பயப்படாத நபர். தற்போது காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக குஷ்பு உள்ளார்.

பெங்களூருவில், நடிகை குஷ்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வரும் மோடி, புயலால் பாதித்த போது எங்கே போயிருந்தார்? முருகனுக்கு அரோகரா என்று கோஷம் போடுவதால் தமிழக மக்கள் அதை மறந்து விடுவார்களா? கேரளாவுக்கு சென்று ஐயப்பா என்று சொல்வதாலும் பா.ஜ.வுக்கு வாக்குகள் கிடைக்காது.

தமிழகத்தில் பா.ஜ. போட்டியிடும் 5 தொகுதியிலும் அவர்களுக்கு நோட்டாவை விட குறைவான வாக்குகளே கிடைக்கும். அ.தி.மு.க.வில் விஞ்ஞானிகள் அதிகம். ஏர் நீர் ஆவியாகமால் இருக்க தெர்மாகோல் தடுப்பு முயற்சி மேற்கொண்டது எல்லோருக்கும் தெரியும். அந்த கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதால் பா.ஜ. தலைவர் தமிழிசை தூத்துக்குடியில் வெற்றி பெறுவேன் தான் வெற்றி பெறுவார் என்ற எண்ணத்தில் கடலில் தாமரை மலர்ந்தே தீரும் என்று பேசியுள்ளார்.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் 10 மணி நேரத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

'பொன்னாருக்கு டிடிவி வைத்த ஆப்பு ; திருப்பியடித்த பாஜக' அம்பலமாகும் திரைமறைவு ரகசியங்கள்

You'r reading பா.ஜ.வுக்கு நோட்டாவை விட கம்மியாதான் ஓட்டு கிடைக்கும்- குஷ்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை