அரிசி உணவுகள் சர்க்கரை வியாதியைத் தருமா?

by Rahini A, May 29, 2018, 16:46 PM IST

சரியான உணவுமுறையும் ஆரோக்கியமான வாழ்வியல் முறையையுமே சர்க்கரை வியாதியை வராமலும் வந்தால் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

அதற்கான முக்கிய வழிமுறையாக அரிசி மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த முதலிலி சர்க்கரை சார்ந்த உணவுகள் மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுப்பொருள்கலை உட்கொள்ளும் போது அது நம் உடலில் சர்க்கரை அணுக்களாக மாறி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவீடுகளை அதிகரிக்கச் செய்துவிடும்.

இதனைத் தடுக்க உடலில் உள்ள மண்ணீரல் உடனடியாக இன்சுலினை சுரக்கச் செய்யும். ஆனால், உடலில் உள்ள அணுக்கள் இன்சுலினை ரத்தத்துக்குள் அனுமதிக்காமல் தடுக்கும். இதனால் மண்ணீரல் இன்சுலின் சுரப்பியை ரத்தத்தில் செலுத்த முடியாமல் போகும்.

இறுதியில் ரத்தத்தில் இருந்து சர்க்கரை வெளியேறாமல் தங்கி இரண்டாம் கட்ட சர்க்கரை வியாதியில் நம்மைக் கொண்டு வந்து நிறுத்திவிடும். இதனாலே, சர்க்கரை மற்றும் மாவுச்சத்து சார்ந்த உணவுப்பொருள்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

You'r reading அரிசி உணவுகள் சர்க்கரை வியாதியைத் தருமா? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை