பத்மாவத் படம் திரையிட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

by Isaivaani, Jan 28, 2018, 09:48 AM IST

மும்பை: தானே மாவட்டத்தில் ‘பத்மாவத்’ படம் திரையிட்ட தியேட்டரின் வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர்சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் பத்மாவத்
இந்த படம் கடந்த 25ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இதன் முன்பாக, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பத்மாவத் படத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதுதொடர்பான வழக்கில், பத்மாவத் படம் வெளியிட எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதன் பிறகு, நீண்ட பிரச்னைக்கு பிறகு பத்மாவத் பம் திரையிடப்பட்டது.

இதனால், பல்வேறு இடங்களில் தீ வைப்பு, தியேட்டர்கள் சூறை, வாகனங்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடந்தன.

இந்த கலவரம் எதிரொலியாக, சென்னையிலும் பத்மாவத் திடைப்படம் வெளியிடப்பட்டதால் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் பகுதியில் அமைந்துள்ள பானுசாகர் என்ற தியேட்டரில் பத்மாவத் திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது.

அப்போது, நேற்று மாலை பத்மாவத் படம் திரையில் ஓடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு கும்பல் பெட்ரோல் குண்டை தியேட்டரின் வாசலில் வீசியது.
இதைக்கண்ட தியேட்டர் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெட்ரோல் குண்டை கைப்பற்றியதை அடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading பத்மாவத் படம் திரையிட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை