உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள்.. பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு

by எஸ். எம். கணபதி, Jan 28, 2020, 12:52 PM IST

டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக எம்.பி. ஒருவர், அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள் என்று பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் ஷாகின்பாக் பகுதியில் பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஷாகின்பாக் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தெற்கு டெல்லி பாஜக எம்.பி.யான பர்வேஷ் நேற்று தனது பிரச்சாரத்தின் போது பேசியதாவது:

ஷாகின்பாக் பகுதியில் லட்சம் பேர் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களுக்கு முதலமைச்சர் கெஜ்ரிவாலே ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், இப்படித்தான் காஷ்மீரில் போராட்டத்தை தூண்டி விட்டார்கள். அதற்கு பிறகு கேரளா, உத்தரபிரதேசம் அடுத்து ஐதராபாத்... இப்படி போரட்டத்தை கொளுத்திப் போட்டவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள்? அந்த நிலைமை டெல்லிக்கு வர வேண்டுமா? அவர்கள் உங்கள் வீடுகளுக்குள் புகுந்து விடுவார்கள். உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள்...

இப்போது விட்டு விட்டு பின்னாளில் துன்பப்படாதீர்கள். அப்போது மோடிஜியும், அமித்ஷாஜியும் உங்களை காப்பாற்ற மாட்டார்கள். இன்னும் நாள் இருக்கிறது. டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களியுங்கள். டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஒரு மணி நேரத்தில் ஷாகின்பாக் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவோம்.
இவ்வாறு பர்வேஷ் வர்மா பேசினார். இப்படி பேசியது தற்போது டெல்லி அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்கள் பலரும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்கள். ஆம் ஆத்மிக்கும், பாஜகவுக்கும் இடையே நடக்கும் இந்த தேர்தல், இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் போன்றது என்று பாஜக பிரமுகர் கபில்மிஸ்ரா பேசியது சர்ச்சையானது. இது தொடர்பாக அவர் மீது வழக்கும் போடப்பட்டிருக்கிறது.

You'r reading உங்கள் சகோதரிகளை பலாத்காரம் செய்வார்கள்.. பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை