புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது!

by Loganathan, Nov 15, 2020, 15:42 PM IST

புதி­யக் கல்­விக்­கொள்­கையை ஏற்­கா­விட்­டால் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் மற்­றும் கல்­லூ­ரி­க­ளுக்கு நிதி வழங்க முடி­யாது என பல்­க­லைக்­க­ழக மானி­யக்­குழு அறி­வித்­துள்­ளது.

மத்­திய அரசு சில மாதங்­க­ளுக்கு முன்பு புதிய கல்­விக்­கொள்­கையை அறி­வித்­தது. இது குறித்து ஒவ்­வொரு மாநி­ல­மும் கருத்­து­களை தெரி­வித்து வந்­துள்­ளது. தமிழ் நாட்­டில் பள்­ளி­க­ளில் மும்­மொழி கொள்­கைக்கு எதிர்ப்பு கிளம்­பி­யது. அதே நேரத்­தில் உயர்கல்­வி­யி­லும் சில திட்­டங்­களை தமி­ழக அரசு ஏற்க தயங்கி வரு­கி­றது.

இது போன்ற சூழ்­நி­லை­யில் பல்­க­லைக்­க­ழக மானி­யக்­குழு பல சுற்­ற­றிக்­கை­களை அனுப்­பி­யுள்­ளது. அதில் புதிய கல்­விக்­கொள்­கையை அமல்படுத்­தா­விட்­டால் பல்­கலைக்­க­ழ­கங்­க­ளுக்கும், கல்­லூ­ரி­க­ளுக்­கும் வழங்­கப்­படும் நிதி நிறுத்தி வைக்­கப்­ப­டும் என எச்­ச­ரிக்கப்­பட்­டுள்­ளது.

புதிய கல்­விக்­கொள்­கையின்­படி பல்­க­லைக்­க­ழக மானி­யக்­குழு ஏற்­ப­டுத்­தி­யுள்ள வித்­வான் அல்­லது இந்­திய ஆராய்ச்சி தக­வல் ஒருங்­கி­ணைப்பு மையம் ஆகி­ய­வற்­றில் உயர்­கல்வி
நிறு­வ­னங்­கள் பதிவு செய்ய வேண்­டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading புதிய கல்வி கொள்கையை ஏற்காவிட்டால் நிதி கிடையாது! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை