இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம்!
புதுச்சேரியில் வருகிற டிசம்பர் மாதம் 10ம் தேதி முதல்19 ம் தேதி வரை இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
புதுச்சேரி இந்திரா காந்தி ஸ்போர்ட்ஸ் காமப்ளக்சில் வருகிற டிசம்பர் மாதம் 10ம் தேதி முதல் 19 ம் தேதி வரை, இந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் புதுச்சேரி, தமிழ்நாடு, அந்தமான் மற்றும நிக்கோபார் தீவுகளை சேர்ந்த 17–21 வயது
முடிந்த ஆண் வீரர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். இணைய தளம் வாயிலாக வருகிற 27 மற்றும் 28ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியாக 10, 12ம் வகுப்பு, டிப்ளமோ படித்தவர்கள மற்றும்
இ்ளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எனவே, இந்த வாய்ப்பினை அனைத்து தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
You'r reading இந்திய விமானப்படைக்கு ஆட்சேர்ப்பு முகாம்! Originally posted on The Subeditor Tamil
More India News