
கன்னியாகுமரி மறக்குடி தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த 27 வயதான ஜெனிபருக்கும் கடந்த 2022 ம் ஆண்டு திருமண நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் , கடந்த 14 ஆம் தேதி ஜெனிபர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பெயரில் , கன்னியாகுமரி போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். ஜெனிபரின் உடல உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, ஜெனிபர் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவரை கொலை செய்துள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்து போன ஜெனிபரின் தாய் வெளிநாட்டில் வீட்டு வேலை செய்து வருகிறார்.