
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறையான இன்று( மார்ச் 16) இன்று சூரிய உதயத்தை காண வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதிகாலையிலேயே கடற்கரையில் குவிந்தனர் .
ஆனால், மேகமூட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்தும் சூரிய உதயத்தை பார்க்க முடியவில்லை. மேலும்
கடல் சீற்றம் காரணமாக விவேகானந்தர் நினைவு பாறைக்கு செல்லும் படகு போக்குவரத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.