தக்கலை மாணவிகள் பலாத்காரம்: பைக்கில் அழைத்து செல்லப்படும் காட்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு மாணவிகள் மாயமாகி மீட்கப்பட்ட விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றும் சிலருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே இரண்டு சகோதரிகள் இன்ஸ்டாகிராம் வழியாக பழக்கமான காதலனை பார்ப்பதற்காக இரவில் தனியாக சென்றுள்ளனர். அப்போது,
அவர்களை பைக்கில் அழைத்துச்சென்ற வழக்கறிஞர் அஜித் குமார் என்பவர் தக்கலையிலுள்ள தனது அலுவலகத்தில் அடைத்து வைத்து ஒரு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். நான்கு நாட்களுக்கு பின்னர் மாணவிகள் மீட்கப்பட்டனல். இது தொடர்பாக, அஜித் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளி வந்துள்ளது.

மாணவிகள் இரண்டு பேரும் இன்ஸ்டாகிராம் மூலம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது . அவரைப் பார்ப்பதற்கு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மற்றொரு இன்ஸ்டா நண்பர் மோகன் (30) உதவுவதாக கூறியுள்ளார். தொடர்ந்து, மாணவிகள் இருவரும்மோகனை சந்தித்துள்ளனர் .

திருநெல்வேலியில் ஒரு வாடகை வீட்டில் மோகன் அந்த மாணவிகளை தங்க வைத்துள்ளார். தொடர்ந்து, மோகனையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் கைதாக வாய்ப்பு உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.