கன்னியாகுமரி: தோவாளையில் உலக சிட்டுக்குருவி தினம்

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் விதமாகவும், சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடத்தை உருவாக்கும் விதமாக மார்ச் 20 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் ஜீவகாருண்ய விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை,தேசியப் பசுமைப் படை, எக்ஸ்ரனோரோ இன்டர்நேஷனல் சென்னை ஆகிய அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு சிட்டுக்குருவி கூண்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் ,சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் விதமாக அந்த பகுதியில் உள்ள மரங்களிலும் வீடுகளிலும் செயற்கை சிட்டுக்குருவி கூடுகளை கட்டி தொங்க விட்டனர் .

பள்ளி, கல்லூரிகளுக்கு சிட்டுக்குருவி கூண்டுகள் விநியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது நமது தலையாயக் கடமை என்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசினர்.