
கன்னியாகுமரி மாவட்ட இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகவும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரித்து உடனடியாக தீர்ப்பு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி செண்பகராமன் புதூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்பாட்டத்திர்க்கு மாவட்ட துணைத்தலைவர் ஐ.தங்கம் தலைமை தாங்கினார், இன்பமனி முன்னிலை வகித்தார். இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்வராணி பெண்கள் அனுபவவிக்கம் பாலியல் கொடுமைகள் குறித்து விவரித்து பேசினார். மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.ஷோபணா சிறுமிகள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதை பற்றி பேசினார். இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்குமார், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட துணைத்தலைவர் ஆரல் பகவதி,ஆரல் குருசாமி ,ஆரல் சுப்பிரமணியம், பேராசிரியர் சுந்தரம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தோவாளை தாலுகா செயலாளர் கல்யாண சுந்தரம் ஆசிரியர் நாகப்பன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் எஸ்.அனில்குமார் நன்றி கூறினார்.