
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சி 6- வது வார்டில் சுகன்யா என்பவர் கவுன்சிலராக உள்ளார். இவரது வார்டுக்கு உட்பட்ட பல பகுதிகளில் பல நாட்களாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை.
இது குறித்து,பல முறை அதிகாரிகளிடம் எடுத்து கூறியும் பலன் இல்லை. கவுன்சிலர் கூட்டத்தில் குடிநீர் பிரச்னை பற்றி பேசியும் பலன் இல்லை.
தற்போது , கோடைகாலம் தொடங்கி விட்டது. இதனால், தனது வார்டில் குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி நேற்று ( மார்ச் 29) திடீரென்று காலி குடங்களுடன் கவுன்சிலர் சுகன்யா பேரூராட்சி அலுவலகம் வந்தார்.
பின்னர், எனது வார்டை மட்டும் ஏன் புறக்கணிக்கீறீர்கள்? என்று கேட்டு செயல் அலுவலர் அம்புஜத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பேரூராட்சி அலுவலகம் வாசலில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டார்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.