கன்னியாகுமரி : 1.250 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல்... ஒருவர் கைது

kanyakumari-1-250-kg-of-ganja-seized-one-person-arrested

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .
ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அஞ்சு கிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த காட்டு புதூர் பகுதியை சேர்ந்த ஷிபின்(27) என்பவரிடத்தில் இருதுந்து 1 கிலோ 250 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஷிபினை போலீசார் கைது செய்தனர். சிறப்பாக செயல்பட்டு குற்றவாளி கைது செய்த நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் பிரவினா மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.