
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மேரி லதா . 55 வயதான இவர் அந்த பகுதியில் உள்ள பெண்களிடம் பணம் வசூலித்து மாத சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இவர் நடத்தி வந்த மாதச் சீட்டில் அதே பகுதியை சேர்ந்த ராஜமேரி, பேபி, நெடிலா, மேரிசஜோபா, எஸ்கலின்மேரி, கிமல்ராஜ், ஆண்ட்ரூஸ்மேரி ஆகியோர் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பத்து மற்றும் இருபது லட்ச ரூபாய் மாத சீட்டில் இணைந்து தவணை தொகை செலுத்தி வந்துள்ளனர் . கடந்த 2023-ஆம் ஆண்டு வரை சுமார் 60 லட்ச ரூபாய் வரை சீட்டு தொகை கட்டியுள்ளனல். சீட்டு முடிந்த நிலையில் முதிர்வு தொகையை மேரி லதா கொடுக்காமல் ஏமாற்றி இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது
இதனால், ராஜமேரி உட்பட ஏழு பேரும் மேரிலதா வீட்டிற்கு சென்று பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். அவர்களிடம் மேரிலதா பணத்தை தர முடியாது என கூறி குடும்பத்தினருடன் சேர்ந்து பணத்தை திருப்பி கேட்ட பெண்களை மிரட்டியுள்ளார் . இதனையடுத்து , பாதிக்கப்பட்ட ராஜமேரி உட்பட 7 பேரும். குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் . புகாரின் அடிப்படையில் மேரிலதா அவரது மருமகன் சுஜின் மகள்கள் அனிஷ் சகாய டின் சினுபா ஆகியோர் மீது பணத்தை வாங்கி மோசடி செய்தது கொலை மிரட்டல் விடுத்தது உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, குளச்சல் போலீசார் மேரிலதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மூன்று பேரை தேடி வருகின்றனர்