
சமூக பொதுநல இயக்கத்தின் துணை அமைப்பான சமூக சிந்தனையாளர் பாசறை சார்பில் சந்திப்போம் சிந்திப்போம் நிகழ்ச்சி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. . சமூக பிரச்னைகள் குறித்து பேசுவதும் அதுபற்றி விவாதிப்பதும், உரிய விழிப்புணர்வு பெறுவதும் இந்நிகழ்வின் நோக்கமாகும்.
தற்போது பெருகிவரும் பாலியல் குற்றங்கள் தொடர்பாகவும். குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குறித்தும் இந்நிகழ்வில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்விற்கு சமூக சிந்தனையாளர் பாசறையின் குமரி மாவட்ட செயலாளர் மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். இயக்க மாவட்ட செயலாளர் சந்திரா வரவேற்றுப் பேசினார். பொது செயலாளர் சங்கரபாண்டியன் தொடக்க உரை நிகழ்த்தினார். துணை பொது செயலாளர் அல்அமீன் ஷாகுல் ஹமீது, குமரி மாவட்ட தலைவர்
குழந்தைசாமி, மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் பெர்லின்ங்டன் கருத்துரை ஆற்றினர்.
குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஷகிலா பானு சிறப்புரை ஆற்றினார்.தொடர்ந்து விவாதமும் நடந்தது. முடிவில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் மரியம்மாள் நன்றி கூறினார். இந்நிகழ்வில் மாநில தலைமை நிலைய செயலாளர் ராஜ், செய்தி தொடர்பாளர் சேர்மா கணேஷ்,குமரி கோட்ட செயலாளர் அலெக்ஸ் மோசஸ்,
மாவட்ட பொருளாளர் மன்னன் பாரி, விவசாய அணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், தோவாளை ஒன்றிய செயலாளர் ராகுல், அமைப்பு செயலாளர் வேல்முருகன், அருமநல்லூர் செயலாளர் முருகேந்திரன், நுள்ளி விளை தலைவர் கணபதி, நிர்வாகிகள் ஜோஸ்பின் மேரி, சுந்தரம், கலைவாணன் மற்றும் புனித தேவகுமார் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.