
கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறையில் உள்ள அரசு ரப்பர் கழகம் முன்பு கடந்த 2024 ஆண்டுமுதல் அரசு ரப்பர் கழக தொழிலாளர்கள் தங்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து நீண்ட நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விவசாயப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கலந்து கொண்டு தங்களது ஆதரவைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில்
காங்கிரஸ் சிறுபான்மை துறை மாவட்டத் தலைவர் முகமது ராபி,
மாவட்ட செயலாளர் முகமது சாதிக் மாவட்ட துணைச் செயலாளர் சேக்
தோவாளை வட்டாரத் தலைவர் ஜினோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தொழிலாளர்களின் உரிமைக்குரலுக்கு ஆதரவு தெரிவித்து பேசினர்.
மேலும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்காக இந்தக் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் வலியுறுத்தி பேசினார்.