
கன்னியாகுமரி மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அறுகுவிளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 50). இவர் நாகர்கோவில் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் கண்ணனிடத்தில் ஆளூர் தோப்புவிளையை சேர்ந்த சுயம்பு என்பவரின் மகன் சுதர்சன் (24) என்ற இளைஞர் போனில் பேசியுள்ளார். தனது 196 கிராம் எடை கொண்ட நகைகள் அடகில் இருப்பதாகவும், அதை மீட்டு விற்பனை செய்ய ரூ.12 லட்சம் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். அதன் பேரில் கண்ணனும் ரூ.12 லட்சம் பணத்துடன் ஆளூர் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்றார். வெளியில் சுதர்சன் நின்றுகொண்டு இருந்தார். அவரை பார்த்ததும், கண்ணன் தான் கொண்டு வந்த 12 லட்சம் பணத்தை சுதர்சனிடம் கொடுத்துவிட்டு டூவீலரை அருகில் பார்க் செய்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
டூவிலரை பார்க் செய்துவிட்டு, வங்கிக்கு வந்து பார்த்த போது சுதர்சனை காணவில்லை. இதனால் பதறிப்போன கண்ணன் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தார். ஆனால், எங்கு தேடியும் அவரை காணவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில் சுதர்சன் பெங்களூர் தப்பி செல்ல இருப்பதாக தெரியவந்தது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் சுதர்சன் பெங்களூர் தப்பி செல்ல. இருந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர் அவரிடம் நடத்திய விசாரணையில், ரூ. 12 லட்சம் பணத்தில் ரூ.2 லட்சத்தை நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டதாகவும், ரூ.20 ஆயிரத்தை செலவு செய்துவிட்டதாகவும் கூறினார். இதையடுத்து மீதி பணத்தை சுதர்சனிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.
சும்மா ஒருவர் கேட்டதும், பணத்தை எடுத்து கொடுத்த நிதி நிறுவன அதிபரை இப்போதுதான் கேள்விப்படுறோம்பா!