பூதப்பாண்டியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ வேண்டுகோள்

Severe-water-shortage-in-Buthapandi-kanyakumari-district

கன்னியாகுமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி, ஈசாந்திமங்கலம், இறச்சகுளம், புத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்து உள்ளார். முக்கடல் அணையின் நீர்மட்டம் 9.3 அடியாக குறைந்ததால், குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும்,
அனந்தநார் கால்வாயில் நடைபெறும் பணிகளால் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்த அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கூடுதலாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியதுடன், நாகர்கோவில் மாநகராட்சி இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படியும் கேட்டுக் கொண்டார்.