
நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு அரசு போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க மானிய கோரிக்கையில் நிதி ஒதுக்குவதுடன் தொழிலாளர்களிடம் விருப்புரிமை பெற்று அரசு ஊழியர் ஆக்கிட வலியுறுத்தி பாரதிய மஸ்தூர்( BMS) தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத் தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார் . துணைத் தலைவர்கள் சின்னையன், மணிகண்டன் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்