
குழந்தைகளுக்கு கோடைகால விடுமுறை விடப்பட்டிருப்பதால், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு பற்றியணு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போக்ஸோ உள்ளிட்ட குற்றங்களை முன்கூட்டியே தடுக்கவும் கன்னியாகுமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலினின் ஆலோசனையின் பெயரில் நிமிர் என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட பெண் காவலர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு சென்று தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
தாய் அல்லது தந்தை மட்டுமே உள்ள குழந்தைகள், கணவன் மற்றும் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களின் குழந்தைகளை பாதுகாப்பதில் கூடுதல் அக்கறை காட்டப்படும்.போக்சோ குற்றங்கள் அதிகமாக நடந்த இடங்கள் இலக்காக நிர்ணயித்து இப்பிரச்சாரம் தீவிர படுத்தப்படும். நிமிர் திட்டத்தில் பங்கேற்கும் பெண் காவலர்களுக்கு. பயிற்சி அளிப்பதற்காக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், தடைய அறிவியல் உதவி இயக்குனர் மினிதா,சமூக நலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எவர்லின் சுபா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மஞ்சு,
ஜீவா,பாலகிருஷ்ணன், இளம் சிறார் நீதி குழும உறுப்பினர்கள் ஜாஸ்மின் மற்றும் .தங்க ஜமீலா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.