
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பள்ளம்துறை பகுதியில் ஒரு பழைய வீட்டை இடித்து அகற்றியுள்ளர். அந்த வீட்டில் இருந்த பீரோக்கு அடியில் நாகப்பாம்பு மற்றும் அதனுடன் இருந்த 24 பாம்பு குட்டிகளுடன் இருந்துள்ளது. அதோடு, ஏழு முட்டைகள் பெரிக்காமல் இருந்துள்ளது. இதை கண்ட வீட்டு உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக, அவர் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிப்பவர் நல்ல பாம்பு அவற்றின் குட்டிகளையும் பத்திரமாக பிடித்து வனத்துறையினரிடத்தில் ஒப்படைத்தார். வனத்துறையினர் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் பள்ளம்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.