11ம் வகுப்பு மாணவன் குத்திக் கொலை ... கன்னியாகுமரியில் பயங்கரம்

11th-grade-student-murdered-horror-in-kanyakumari

கன்னியாகுமரி அருகே உள்ள மாதவரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு பரத்(16) இவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அப்பகுதியில். நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த ஆட்டோ டிரைவர் சந்துரு என்பவர் விஷ்ணுபரத்திடம். வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு அடிதடியாக மாறியுள்ளது . அப்போது, சந்துரு தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து மாணவரை சரமாரியாக குத்தினார். இதில், சம்பவ இடத்திலேயே. விஷ்ணு பரத் உயிரிழந்துள்ளார். இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்துருவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.