31 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் இரண்டு பேர் கைது கன்னியாகுமரி மாவட்ட போலீசார் அதிரடி

31-kg-of-ganja-seized-two-arrested-kanyakumari-district-police-take-action

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் இரணியல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டனர்.சோதனையில் 31 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . அதோடு, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த அன்பழகன்(63), தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த பிச்சையா என்பவரின் மகன் இசக்கி ராஜ் (53), ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஒரு கார் மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. மேலும் நேசமணி நகர் காவல் நிலைய த்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முருகன், பேச்சியப்பன்,அருண் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிட்ம் இருந்து மூன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.