
கன்னியாகுமரி நகராட்சி மற்றும் தேவஸ்தானம் பகுதியில் கடந்த 10 வருடங்களாக 30-க்கும் மேற்பட்ட பச்சை குத்தும்
தொழிலாளர்கள் கடைகள் நடத்தி வருகின்றனர் . இவர்கள், அனைவரும் முறையாக பச்சை குத்தும் பயிற்சி பெற்றதற்காக சான்றிதழ்கள் பெற்றுள்ளனர் . இந்நிலையில் மே 1-ம் தேதி. பச்சை குத்தும் கடைகளை நடத்த கூடாது என்று கன்னியாகுமரி நகராட்சி அதிகாரிகள்
வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்ததால் , அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி வாழ்ந்து வருகிறார்கள் . இதையடுத்து, இன்று( மே 2)பச்சை குத்தும் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் கடை திறந்து தொழில் செய்ய அனுமதிக்கும்படி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.