
கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை. மேற்கொண்டனர். சோதனையின் அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்த
திருநெல்வேலி கைலாசபுரம் பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் விக்னேஷ் (22), திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் கார்த்திகேயன் (23), சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் மனோஜ் குமார் (23), களக்காடு பாரதிபுரம் பகுதியை சேர்ந்த தளவாய் என்பவரின் மகன் மகேந்திரன் (19) மற்றும் 16. வயது நபர். ஆகியோரிடம் இருந்து. விற்பனைக்காக வைத்திருந்த 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் சம்மந்தப்பட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
கஞ்சா.விற்பனையில் சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும்
இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.