
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள், கட்டடங்கள் மற்றும் எல்லையை அளவீடு செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவீடு பணி துல்லியமாக செய்ய ட்ரோன் மூலம். அளவீடு செய்யப்படுகிறது.
இதற்கான மாதிரி அளவீடு பணியை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மேயர்மகேஷ். மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் தொடங்கி வைத்தனர். உதவி செயற்பொறியாளர் ரகுராம் மாமன்ற உறுப்பினர் கலாராணி அரசு துறை அதிகாரிகள் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.