
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே பிரிந்து வாழும் மனைவி காரில் துரத்திச் சென்று கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவர் முகமது அப்துல் காதர். இவரது மனைவி சரபு நிஷா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்தனர். சரபு நிஷா தனது சகோதரருடன் சென்னையில் வாழ்ந்து வந்தார். இவர்களின் மகள் மணவாளக்குறிச்சியில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார்.
இந்த நிலையில், மகளை சென்னையில் படிக்க வைக்க சரபு நிஷா முடிவு செய்தார். இதற்காக, டி.சி வாஙக மணவாளக்குறிச்சிக்கு காரில் சரபு நிஷா வந்துள்ளார். மகளை சென்னை கல்லூரிக்கு மாற்றுவதால், அப்துல் காதர் ஆத்திரம் கொண்டார்.
இதனால், நேற்று அடியாட்களுடன் தனது காரில் துரத்திச் சென்று சரபு நிஷா சென்ற காரை இடித்துள்ளார். பின்னர், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இது தொடர்பாக, சரபு நிஷா போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.