குறைந்த விலையில் சானிடரி பேட்கள்: குரல் கொடுக்கும் ராதிகா ஆப்தே

by Rahini A, Apr 1, 2018, 12:34 PM IST

பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, குறைந்த விலையில் அரசு வழங்கப் போகும் சானிடரி பேட் திட்டத்துக்கு தானாக முன்வந்து குரல் கொடுத்துள்ளார்.

இந்திய அளவில் பல முக்கிய திரைப்படங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து பெயர் பெற்றவர் நடிகை ராதிகா ஆப்தே. தமிழில் `அழகுராஜா’, `கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ராதிகா, எப்போதும் பெண்கள் சந்திக்கும் சமூக பிரச்னைகளுக்கு தானாக முன் வந்து குரல் கொடுத்து வருபவர். இந்நிலையில், அரசின் புதிய திட்டம் ஒன்றுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார்.

கிராமப்புறங்களில் இருக்கும் பள்ளி மாணவிகளுக்கு சானிடரி பேட்கள் பாக்கெட்டை 5 ரூபாய்க்கும், கிராமப்புற பெண்களுக்கு 24 ரூபாய்க்கும் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இந்தத் திட்டத்துக்குத்தான் ராதிகா குரல் கொடுத்துள்ளார்.

இது குறித்து ராதிகா பேசும்போது, `மாதவிடாய் காலங்களில் பெண்கள் சந்தித்து வரும் பிரச்னைகள் பல்லாண்டு காலமாக தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில், குறைந்த விலையில் சானிடரி பேட்களை அரசு வழங்க முன் வந்துள்ளது வரவேற்கத்தக்கது. இது பல கிராமப்புற பெண்கள் வாழ்க்கையில் வெளிச்சமூட்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading குறைந்த விலையில் சானிடரி பேட்கள்: குரல் கொடுக்கும் ராதிகா ஆப்தே Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை