வேலூரில் வெற்றி யாருக்கு? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Vellore Loksabha election, vote counting begins

by Nagaraj, Aug 9, 2019, 09:37 AM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.


நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற்ற போது, வேலூர் தொகுதியில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இங்கு கடந்த 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தும், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலைச் சின்னத்திலும் போட்டியிட்டனர்.

வேலூர் தொகுதியில் வெற்றி பெறுவதை கவுரவப் பிரச்னையாகக் கொண்டு, அதிமுகவும், திமுகவும் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பு காட்டிய நிலையில் கடந்த 5-ந் தேதி விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.


தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவான நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. முன்னணி நிலவரம் அடுத்த ஓரிரு மணி நேரங்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தத் தொகுதி தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading வேலூரில் வெற்றி யாருக்கு? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை