மழைக்கு நடுவே இந்தியா- ஆஸி இடையேயான கடைசி ஒருநாள் போட்டி!
India vs Australia 3rd ODI: India to bowl, debut for Vijay Shankar
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி சரித்திரம் படைத்தது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என சமநிலையில் இரு அணிகளும் உள்ளன. இந்த நிலையில் இன்று மெல்போர்னில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் மழை காரணமாக தாமதமாக டாஸ் போடப்பட்டது. இதில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இன்றைய போட்டியில் தமிழக வீரர் விஜய்சங்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரு அணிகளுமே தொடரை வெல்ல முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மழை மீண்டும் குறுக்கிட்டது. இதனால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மழை ஓய்ந்ததும் மீண்டும் போட்டி நடைபெற்று வருகிறது.
You'r reading மழைக்கு நடுவே இந்தியா- ஆஸி இடையேயான கடைசி ஒருநாள் போட்டி! Originally posted on The Subeditor Tamil
More Sports News