யார், யாரை பிடித்து வைத்துக் கொண்டது ஐபிஎல் அணிகள்!

ஐபிஎல் போட்டியில் பங்கேற்றவுள்ள எட்டு அணிகளும் யார், யாரை தக்கவைத்துக் கொண்டுள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Jan 5, 2018, 15:52 PM IST

ஐபிஎல் போட்டியில் பங்கேற்றவுள்ள எட்டு அணிகளும் யார், யாரை தக்கவைத்துக் கொண்டுள்ளன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் 11-ஆவது சீசனில் ஒவ்வொரு அணியும் ஏலத்திற்கு முன்பாக நேரடியாக 3 வீரர்களையும், ஏலத்தின் போது 2 வீரர்களையும் தக்கவைக்கலாம்.

இந்த விதிமுறையின்படி எட்டு அணிகளும், தங்களது அணியில் நேரடியாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வியாழனன்று வெளியிட்டுள்ளன.

தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி, சுரேஷ்ரெய்னா, ரவீந்திர ஜடேஜா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: கிறிஸ் லின், சுனில் நரேன்.

சன்ரைஸ் ஹைதராபாத்: டேவிட் வார்னர், தீபக் ஹூடா.

கிங்ஸ் லெவன் பஞ்சாப்: அக்‌ஷர் பட்டேல்

தில்லி டேர் டெவில்ஸ்: ரிஷப் பாண்ட், ஸ்ரேயாஸ் அய்யர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட்கோலி, டிவில்லியர்ஸ், சர்ப்ராஷ் கான்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவ் ஸ்மித்.

மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்டியா, கருணால் பாண்ட்டியா.

இந்த வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இறுதி பட்டியல் தயாரித்து அறிக்கை வெளியிடும். அதன் பின்னர் வீரர்கள் ஏலம் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

You'r reading யார், யாரை பிடித்து வைத்துக் கொண்டது ஐபிஎல் அணிகள்! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை