ஐபிஎல் ஏலம்: 1003 வீரர்கள் போட்டா போட்டி!
IPL Auction: 1003 competitive athletes!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் 70 இடத்திற்கு 1003 வீரர்கள் போட்டா போட்டி போட்டுள்ளனர்.ஐபிஎல் தொடரின் 12வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறும். அதற்கான வீரர்கள் ஏலம் எடுக்கப்படவுள்ளனர். வருகிற டிசம்பர் 18ம் தேதி ஜெய்ப்பூரில் ஏலம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியிலும், பழைய வீரர்கள் அதிக அளவில் தக்கவைக்கப்பட்டதால், புதிதாக 70 வீரர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால், இந்த 70 இடத்திற்கு சுமார் 1003 வீரர்கள் பதிவு செய்து உள்ளனர். இதில் 232 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
இந்த ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ள 800 பேர் சர்வதேச போட்டி அனுபவம் இல்லாதவர்கள். இவர்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடியவர்கள். ஐபிஎல் மோகம் மற்றும் அளவுக்கதிகமான பணம் மற்றும் புகழ் இதில் கிடைப்பதால், வீரர்கள் எப்படியாவது எந்த அணியிலாவது நுழைந்து விட வேண்டும் என கடும் போட்டியில் உள்ளனர்.
வருகிற டிசம்பர் 10ம் தேதி இறுதி செய்யப்பட்ட ஏலப் பட்டியல் வெளியாகும். இந்த முறை ரிச்சர்ட் மேட்லிக்கு பதிலாக இங்கிலாந்தில் ஏலம் நடத்துவதில் ஜாம்பவனான ஹூக் எட்மிடெஸ் ஏலம் நடத்தவுள்ளார்.
You'r reading ஐபிஎல் ஏலம்: 1003 வீரர்கள் போட்டா போட்டி! Originally posted on The Subeditor Tamil
More Sports News