பெண்கள் குறித்து வில்லங்க விமர்சனம்.. கிரிக்கெட் வீரர்கள் ராகுல், பாண்ட்யா சஸ்பெண்ட் !

Cricketer Rahul, pandya suspend for Commented on women

by Nagaraj, Jan 11, 2019, 16:32 PM IST

பெண்கள் குறித்து வில்லங்கமாக பேசி சர்ச்சைக்குள்ளான இந்திய இளம் கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி . டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகத்தில் அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை துவங்குகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலிய டி.வி.ஷோ ஒன்றில் பங்கேற்ற இக்திய வீரர்கள் லோகேஷ் ராகுல், ஷர்த்திக் பாண்ட்யா ஆகியோர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பெண்களைப் பற்றி தவறாக வர்ணித்ததால் சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனக் குரல் எழுந்ததால் இருவருக்கும் கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த இருவரும் தங்களது செயலுக்கு வருத்தம் தெரிவித்தும் , மன்னிப்பும் கேட்டனர். இந்தப் பதில் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி இருவரையும் சஸ்பென்ட் செய்து பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் இருவரும் விளையாட முடியாது என்று தெரிகிறது.

You'r reading பெண்கள் குறித்து வில்லங்க விமர்சனம்.. கிரிக்கெட் வீரர்கள் ராகுல், பாண்ட்யா சஸ்பெண்ட் ! Originally posted on The Subeditor Tamil

More Sports News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை