திமுக-காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீடு பேச்சு நிறைவடைந்தததுவிரைவில் அறிவிப்பு வெளியாகும் - கே.எஸ் அழகிரி

Loksabha election,k.salagiri on dmk-cong seat share,nbsp talks end smoothly

by Nagaraj, Mar 9, 2019, 14:20 PM IST

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளது. இந்த 9 தொகுதிகள் எவை என்பது குறித்து திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீட்டுக் குழுவினர் இன்று அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

காங்கிரஸ் தரப்பில் குமரி, விருதுநகர், தேனி, சிவகங்கை, திருச்சி, சேலம், ஆரணி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளை குறிவைத்து கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை முடிந்தவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், தொகுதி ஒதுக்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்ததாகவும், எந்த இழுபறியும் இல்லை என்றார். தொகுதிப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

You'r reading திமுக-காங்கிரஸ் தொகுதி ஒதுக்கீடு பேச்சு நிறைவடைந்தததுவிரைவில் அறிவிப்பு வெளியாகும் - கே.எஸ் அழகிரி Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை