உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!

by Ari, May 1, 2021, 15:44 PM IST

சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் ரெம்டெசிவிர் மருந்து வாங்குவதற்காக கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் குவிந்து வருகின்றனர்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் பலருக்கு, ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா உள்ளிட்ட மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்த மருந்துகளுக்கு தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டிய சூழல் இருப்பதால், மருத்துவர்கள் இந்த மருந்தை வெளியில் வாங்க பரிந்துரைத்து வருகின்றனர். இதனால் மருத்தவர்களின் பரிந்துரை சீட்டுகளுடன் நோயாளிகளின் உறவினர்கள் தெருத்தெருவாக மருந்தகங்களை தேடி அலைகின்றனர்.

இதனிடையே, ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா போன்ற மருந்துகள் தேவைப்படுவோர் அரசிடம் பெற்று கொள்ளலாம் என தமிழக மருத்துவ பணிகள் கழகம் அறிவித்தது. ரெம்டெசிவிர், ஆக்டெம்ரா போன்ற மருந்துகள் தேவைப்படுவோர், நோயாளியின் ஆதார் அட்டை, மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு, ஆர்டிபிசிஆர், பரிசோதனை சான்று, சிடி.ஸ்கேன் உள்ளிட்ட ஆவணங்களுடன் நேரில் சென்று ஒரு குப்பிக்கு 1,545 ரூபாயை கொடுத்து மருந்துகளை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்ய சிறப்பு மையம் கடந்த 26 ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்த சிறப்பு மையத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பெறுவதற்காக நோயாளிகளின் உறவினர்கள் மணிக் கணக்கில் காத்துக் கிடந்து மருந்துகளை வாங்கிச் செல்கின்றனர்.

சென்னை கீழ்ப்பாக்கம் மையத்தில் ரூ.1.88 கோடிக்கு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் 12 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி! Originally posted on The Subeditor Tamil

More Chennai News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை