காவல் துறை உதவியுடன் வலம் வரும் எஸ்.வி.சேகர்: வைரல் புகைப்படம்
பெண் பத்திரிக்கையாளர் குறித்து இழிவாக தனது பேஸ்புக்கில் பதிவிட்ட விவகாரத்தில் கைது செய்யப்படாத நிலையில் எஸ்.வி.சேகர் போலீசாரின் உதவியுடன் வலம் வரும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் வகையில் எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டு எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. மேலும், எஸ்.வி.சேகரை கைது செய்ய எந்த தடையும் இல்லை என்றும் உயர் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், தமிழக போலீசார் எஸ்.வி.சேகரை கைது செய்யப்படாமல் 50 நாளுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்கு, போஸ்டர்கள் ஒட்டப்பட்டு எஸ்.வி.சேகரை பலர் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்நிலையில், எஸ்.வி.சேகர் போலீசாரின் பாதுகாப்புடன் குடும்ப விழாக்கள், பொது விழாக்களில் வலம் வந்துக் கொண்டிருக்கும் புகைப்படங்கள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதேபோல், சமீபத்தில், காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் சென்னை புறநகரில் உள்ள ஓட்டலுக்கு எஸ்.வி.சேகர் வந்து செல்லும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதைக் கொண்டு நெட்டிசன்கள் எஸ்.வி.சேகர், காவல் துறை மட்டுமின்றி தமிழக அரசையும் கலாய்த்து வருகின்றனர்.
You'r reading காவல் துறை உதவியுடன் வலம் வரும் எஸ்.வி.சேகர்: வைரல் புகைப்படம் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News