தியாகச் செம்மல் எச்.ராஜா - வருவாய்த்துறை அமைச்சர்
தியாகச் செம்மல் எச்.ராஜா - வருவாய்த்துறை அமைச்சர்
காவல்துறையை கடும் வார்த்தைகளால் பேசிய கருணாஸை கைது செய்த காவல் துறையினர், அதைவிட மிக கடுமையாக பேசிய எச்.ராஜாவை கைது செய்யாதது ஏன்? என்ற கேள்வியை எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கேட்டு வரும் நிலையில் இந்த கேள்விக்கான விடையை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தற்போது தெரிவித்துள்ளார்.
எச்.ராஜா எனும் இம்மனிதன் இந்தியாவிலுள்ள 19 மாநிலங்களை ஆட்சி செய்யும் கட்சியை சேர்ந்தவர். கொள்கை, லட்சியத்தோடு உள்ள மாண்புமிகு பாரத பிரதமர் தலைமையின் கீழ் இயங்குகின்ற, இந்நாட்டிற்காக உழைத்த வர். ஒரு இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருப்பவர். இந்த இடத்தை அவர் அடைவதற்கு எத்தனை உழைப்புகள், சேவைகள், தியாகங்கள் செய்திருப்பார் என்பதை அனைவரும் எண்ணி பார்க்க வேண்டும்.
அவரையும், அதிர்ஷ்டத்தால் எம்.எல்.ஏ ஆகி, இன்று அதிர்ஷ்டத்தை தொலைத்துவிட்டு விளம்பரத்திற்காக உளறிக் கொண்டிருக்கும் கருணாஸையும் ஒப்பிட கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். ஒருசில அதிமுக அமைச்சர்கள் பாஜகவை தாக்கியும், ஒருசில அதிமுக அமைச்சர்கள் பாஜகவை புகழ்ந்தும் பேசி வருவதால் இருகட்சிகளுக்கு இடையே உள்ள உறவை புரிந்து கொள்ளவே முடியவில்லை எனப் பலரும் கூறுகின்றனர்.
You'r reading தியாகச் செம்மல் எச்.ராஜா - வருவாய்த்துறை அமைச்சர் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News