தென்காசி மாவட்டம் கொல்லம் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் இலத்தூர் பகுதியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் குளம் அமைந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த குளத்து பகுதிக்கு அருகே சடலம் ஒன்று முழுவதுமாக எரிந்த நிலையில் கிடந்ததை செவ்வாய் அன்று காலை அப்பகுதிக்குச் சென்ற நபர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து இலத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணையை மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பெயரில் கூடுதல் உதவி காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட உடலில் கிடந்த மெட்டி மற்றும்
உடல் முழுவதுமாக எரிந்த நிலையில் இடது கை மட்டும் எரியாத நிலையில்
மீட்க்கப்பட்ட உடல் 30வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் என்பது தெரியவந்தது. இந்த நிலையில் உடலுக்கு அருகில் மது பாட்டில்கள் மற்றும் அருகில் கிடந்த தடயங்களை சேகரித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த பெண்ணின் உடல் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில்திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.விசாரணையில் சிவகாசியை சேர்ந்த கமலி என்ற பெண்ணை அவரது கணவர் ஜான் கில்பர்ட் குடும்பத்தகராறு காரணமாக கம்பியால் அடித்து
கொலை செய்து எரித்துள்ளார்.
சிவகாசி பகுதியை சேர்ந்த ஜான் கில்பர்ட் பெயிண்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இவர் வேலை செய்து வரும் அதே பகுதியில் கமலி தையல் கடையில் பணிபுரிந்துள்ளார். அப்போது, இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் இருவரும் கலப்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் யாஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையே, இருவருக்கும் இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் மீண்டும் சண்டை போட்டுள்ளனர். அப்போது, ஆத்திரத்தில் இருந்த கணவர் ஜான் கில்பட் கமலியை இரும்பு கம்பியால் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் . பின்னர், சடலத்தை காரின் டிக்கி பகுதியில் வைத்து கொண்டு தனது சித்தப்பாவின் மகனான தங்க திருப்பதி என்பவருடன் சேர்ந்து இனோவா காரில் தென்காசி மாவட்டம் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்துள்ளார்.
இரண்டு நாட்களாக சுற்றி திரிந்து ஆள் நடமாட்டம் இல்லாத இலத்தூர் குளத்துக்கரையோரம் கமலியின் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். சடலம் முழுவதுமாக எரியாத நிலையில், இடது கை மற்றும் அவர் காலில் அணிந்த மெட்டி போன்றவற்றை கொண்டு கொல்லப்பட்டது கமலினி என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, கணவர் ஜான்கில்பர்ட் மற்றும் அவரது தம்பி தங்க திருப்பதி ஆகியோரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.
மனைவியைப் கொன்று கணவனே எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.