தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட ஏந்தலூர் கிராமத்தில் நடுத்தெருவில் வசிக்கும் சந்திரன் என்பவரின் மகன் செல்வம் அங்குள்ள தனியார் கல்லூரியில் இராண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், இரு நாள்களுக்கு முன்பு அதே ஊரில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்த அடிப்படையில், ஊத்துமலை ஆய்வாளர் வனசுந்தர் வீ. கே. புதூர் உதவி ஆய்வாளர் பவுல் மற்றும் காவலர்கள் சமூக நல குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளும் சிறுமியிடம் விசாரணை செய்தனர் .
சிறுமியின் பெற்றோர் புகார் கொடுக்க முன்வராத நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் புகார் செல்வம் மீது புகார் அளித்தனர். தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதியபட்டு செல்வம் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி பாலியல் தொல்லையால் பாதிக்கபட்டு இருப்பதை தெரிந்தும் பெற்றோர் புகார் கொடுக்க முன்வராதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கிராமங்களில் வசிக்கும் பெற்றோர் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.