
தென்காசியை சேர்ந்த நம்பிராஜன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். இந்தமனு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலின் செயல் அலுவலர் முருகனின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டருக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதி இழந்துள்ளது. மேலும் திருப்பணிகள் குறித்து சென்னை IIT குழு மற்றும் வழக்கறிஞர் ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்தனர். உத்தரவின் பெயரில் காசி விஸ்வநாதர் கோவிலில் அட்வகேட் கமிஷனர் ஆனந்தவல்லி தலைமையில் அனு சந்தானம், அருண் மேனன் உள்ளிட்ட ஐஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஐஐடி குழுவினர் ஆய்வில் கோவிலில் செய்யப்பட்ட பணிகள் சரிவர முடியவில்லை என தெரிய வந்துள்ளது.