
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் ,ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலம். இது குற்றால சீசன் காலம் என்று கூறப்படுகிறது .இந்த காலத்தில் இங்குள்ள அருவிகளில் நீராடுவதற்கும் சுமார் 80 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
இந்த ஆண்டு முன்னதாகவே சீசன் தொடங்கியதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளை நீராடுவதற்கு வந்த வண்ணம் உள்ளனர். அருவிகளில் தண்ணீர் வரத்தும் சீராக கொட்டி வருவதாலும் இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.
குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றாலம் , ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் குவிந்துள்ளனர். போலீசாரின் கண்காணிப்பும் பலமாக உள்ளது.