கோவில்பட்டி அருகே பைக் மீது டிராக்டர் மோதியதில் விளாத்திகுளம் பேரூராட்சி தலைவரின் மகன் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி தலைவராக அயன் சூரியராஜ் உள்ளார். இவரது இளைய மகன் செல்வம் (28) தனது நண்பர் ஸ்ரீராம் (33) என்பவருடன் கோவில்பட்டிக்கு சென்று படம் பார்த்துள்ளனர்.பின்னர், இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பியுள்ளனர்
கோவில்பட்டி - எட்டையாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, இவர்களுக்கு முன்பாக சென்று கொண்டிருந்த டிராக்டர் பல்க்கில் டீசல் போடுவதற்காக திடீரென திரும்பியுள்ளது. இதில், டிராக்டரின் ட்ரெய்லர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீராம் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.