பாலியல் தொழிலாளியை நான் எப்படி ஏற்க முடியும்?- தூத்துக்குடியில் சீமான் காட்டம்

தென்காசி மாவட்டம் கடையநல்லுரில் கனிம வள கொள்ளையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.

வாகைகுளம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், எனக்கு முன்னரே நான்கு பேரை இப்படி செய்து வந்தால் அந்த வேலைக்குப் பெயர் என்ன என்று சொல்வீர்கள்? . பழகுறது அதன் பின வழக்கு தொடுப்பது. வம்படியாக மிரட்டி பணம் கேட்பது என்றால் எப்படி? அதிகபட்சமாக அவர் வைத்த கோரிக்கை மாதம் 30,000 கொடுக்க வேண்டும் என்று கேட்டார். இதை அவர் சொன்னாரா இல்லையா ? என்று அவரிடம் கேளுங்கள். கண்ணியம் காத்து நானும் வாயை மூடினேன் ஆனால், தற்போது இது ஒரு முடிவுக்கு வந்துவிட்டதல்லவா? நீ என்னை குடும்பத்தை என்னை மரியாதையாக பேசுகிறாயா? காதலிச்சேன் என்கிறாய். ஒவ்வொருவரையும் இடைமறித்து, இடைமறித்து பணம் பறிப்பதற்கு பெயர் என்ன சொல்வீர்கள். இதற்கு பெயர் என்ன வைப்பீர்கள்..

பாலியல் குற்றவாளி என்று என்னை சொல்வதற்கு பாலியல் தொழிலாளியை நான் எப்படி ஏற்க முடியும்? மானங்கெட்ட நீங்கள் இப்படி பேசினால் தன்மானத்துக்காக போராடும் மகன் நான் எப்படி பேசுவேன். மானத்துக்காக உயிரை விட்ட இனத்தில் வந்தவன் நான். இதற்கு முன்னால் சந்திச்ச ஆள் வேற, இனி சந்திக்கப் போற ஆள் வேற என்று பேசினார்.