Advertisement

8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை -தூத்துக்குடிக்கு ஸ்பைஸ்ஜெட் சேவை

சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளன. தினமும் சென்னை- தூத்துக்குடி இடையே 4 விமானங்களும், தூத்துக்குடி- சென்னை இடையே 4 விமானங்களும் நாள் ஒன்றுக்கு 8 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த சேவையை இண்டிகோ விமான நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த விமானங்கள் அனைத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

பண்டிகை காலங்கள், முகூர்த்த நாட்கள், கோடை விடுமுறை காலங்கள் போன்றவைகளில் விமானங்களில் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை. . இதை தொடர்ந்து, சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு அதிக விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 30ம் தேதியில் இருந்து, சென்னை- தூத்துக்குடி இடையே மேலும் 2 விமானங்களும், தூத்துக்குடி- சென்னை இடையே 2 விமானங்களும், 4 விமானங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதே போல தூத்துக்குடி-பெங்களூரு மார்க்கத்திலும் கூடுதலாக ஒரு விமானம் இயக்கப்படவுள்ளது. கூடுதல் விமானங்களை ஸ்பைஸ்ஜெட் இயக்குகிறது. இதனால், இனிமேல் சென்னை- தூத்துக்குடி- சென்னை இடையே, ஒரு நாளில் 12 விமானங்கள் இயக்கப்படும். அதில் 6 விமானங்கள், சென்னை-தூத்துக்குடி இடையேயும், 6 விமானங்கள், தூத்துக்குடி- சென்னை இடையேயும் இயக்கப்படும். இதேபோல், சென்னை- திருச்சி- சென்னை விமானங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளன.

மேலும் படிக்க
thief-arrest-in-nazareth
நாசரேத்தில் பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்ற வாலிபர் கைது: பைக் பறிமுதல்!!
nazareth-summer-water-camp
நாசரேத்தில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா : போலீஸ் இன்ஸ்பெக்டர் திறந்து வைத்தார்!
explain-about-traffic-rules-fine
போலீசுக்கு அல்வா கொடுக்கலாம்: தானியங்கி இயந்திரம் சும்மா விடாது- காயல்பட்டினம் இளைஞருக்கு நடந்த சம்பவம்
example-teacher-for-other-teachers
மாணவர்களின் ஆசையை நிறைவேற்ற ஒரு ஆசிரியர் எடுக்கும் முயற்சி : பிற ஆசிரியர்களுக்கு சிறந்த பாடம்!
thoothukudi-Man-arrested-for-posting-defamatory-comments-on-social-media
தூத்துக்குடி :  சமூக வலைதளங்களில் தலைவர்கள் குறித்து அவதூறாக பதிவிட்டவர் கைது
thootukodi-rowdy-arrested-in-chennai
தூத்துக்குடி மகாராஜா என்ற பிரபல ரவுடியை சென்னையில் சுட்டு பிடித்த போலீஸ்
training-for-police-officer-in-tuticorin
தூத்துக்குடி : போலீசாருக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி
who-is-roshni-nadar
தந்தை மகளுக்கு ஆற்றிய உதவி: இந்தியாவின் 3வது பணக்காரரான ரோஷினி நாடார்
bjp-ramasrinivasan-condemned-nellai-murder
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. கொலை : பா.ஜ.க. ராமசீனிவாசன் கடும் கண்டனம்
kulasekharapatnam-going-to-change
இன்னும் இரண்டே ஆண்டுகள்: குலசேகரப்பட்டினம் அடியோடு மாறப் போகிறது!