தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரி கைது

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் தலைமையில் தூத்துக்குடி நகர தனிப்படை போலீசார் நேற்று( மார்ச்14) தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தாளமுத்துநகர் காமராஜர் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த அதே பகுதியைச் சேர்ந்த செல்வேந்திரன் (57) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர், அவரிடமிருந்த 3 .300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.