லாக் அப் டெத் வழக்கில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் உள்பட 8 போலீசாருக்கு ஆயுள் தண்டனை: தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி

கடந்த 18.9.1999 ஆம் ஆண்டு தூத்துக்குடி தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்சென்ட் என்பவர் மரணமடைந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண் ஒன்றில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய தற்போதைய ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன் உள்பட 8 போலீசாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தாண்டவன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.